478. நீ இல்லாமல் என்னிதயம் முழுமை ஆகுமா
நீ இல்லாமல் என்னிதயம் முழுமை ஆகுமா
நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா - 2
இயேசு நாயகா பேசும் தெய்வமே சீவநாயகா தாகம் தீருமே
மெளனம் கலையுமா சேதி சொல்லுமா
வார்த்தை வழியிலே கால்கள் செல்லுமா
1. குருடர் பார்வை பெற்றதும் சீடர் பாடம் கற்றதும்
பாவி திருந்தி வாழ்ந்ததும் தேவன் வார்த்தை வலிமையே - 2
காற்றும் கடலும் தணிந்ததும் பகிர்ந்து வாழத் துணிந்ததும்
அன்பின் ஆட்சி மலர்ந்ததும் வார்த்தையால்
அடியேன் கேட்கிறேன் பேசும் இயேசுவே
2. பயணம் இணைந்து செல்லவும் சாவின் ஆற்றல் கொல்லவும்
அன்பின் சக்தி வெல்லவும் வார்த்தை வேண்டும் சொல்லுமே - 2
வெறித்தனங்கள் அழியவும் நெறித்தடங்கள் அமையவும்
அமைதித் தென்றல் வீசவும் பேசும் தெய்வமே
எல்லாம் அன்பின் மயம் ஆகும் இயேசுவே
நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா - 2
இயேசு நாயகா பேசும் தெய்வமே சீவநாயகா தாகம் தீருமே
மெளனம் கலையுமா சேதி சொல்லுமா
வார்த்தை வழியிலே கால்கள் செல்லுமா
1. குருடர் பார்வை பெற்றதும் சீடர் பாடம் கற்றதும்
பாவி திருந்தி வாழ்ந்ததும் தேவன் வார்த்தை வலிமையே - 2
காற்றும் கடலும் தணிந்ததும் பகிர்ந்து வாழத் துணிந்ததும்
அன்பின் ஆட்சி மலர்ந்ததும் வார்த்தையால்
அடியேன் கேட்கிறேன் பேசும் இயேசுவே
2. பயணம் இணைந்து செல்லவும் சாவின் ஆற்றல் கொல்லவும்
அன்பின் சக்தி வெல்லவும் வார்த்தை வேண்டும் சொல்லுமே - 2
வெறித்தனங்கள் அழியவும் நெறித்தடங்கள் அமையவும்
அமைதித் தென்றல் வீசவும் பேசும் தெய்வமே
எல்லாம் அன்பின் மயம் ஆகும் இயேசுவே