முகப்பு


485. நீரே என் ஆண்டவரே நீரே என் தந்தையன்றோ
நீரே என் ஆண்டவரே நீரே என் தந்தையன்றோ
உன் அன்பில் நான் வாழ உன்னோடு பேச
என்னுள்ளம் ஏங்கிடுதே
உன் ஊற்றுப் பருக உன்னில்லம் வந்தேன்
இனிதாகக் கனிவாக நிறைவாக ஏற்று நாளெல்லாம் காத்திடுவாய்

1. என் வாழ்வை நீ அமைத்தாய் தலைவா
உன்னை நான் காணவில்லை
என் எண்ணம் ஏற்றி வைத்தாய்த் தேவா உன் பாதை செல்லவில்லை
உன்னையே நான் மறந்தேன் இறைவா அக ஒளி காணவில்லை
கறையைத் துடைப்பாய் இன்று என்னை மாற்றிடவா

2. ஊரெங்கும் பாடிவந்தேன் ஏனோ உன் புகழ் பாடவில்லை
வையத்தை நீ படைத்தாய் நானோ வைகறை தேடவில்லை
காலங்கள் மாறிவிடும் உன்னுள்ளம் கருணையின் கடலாகும்
குறையைத் தீர்ப்பாய்க் கண்போல் என்னைக் காத்திடவா