494. மழையினில் பெருவெள்ளம் எனைச் சூழ்ந்தால்
மழையினில் பெருவெள்ளம் எனைச் சூழ்ந்தால்
வீழ்வதில்லை நான் விழுவதில்லை
புயல் காற்று என்மேல் மோதினாலும்
சாய்வதில்லை நான் சாவதில்லை
எதிரியின் படையினைத் தாக்கிடவும் உயரிய மதிலைத் தாண்டிடவும்
ஆற்றலும் சக்தியும் எனக்கு உண்டு
இயேசுவின் துணை எனக்கிருப்பதனால்
1. இயேசுவை நம்பி வாழுகிறேன்
அவர் என்னை என்றும் பிரிவதில்லை
இருளிலும் வெயிலிலும் நடந்தாலும்
எனை என்றும் கைவிடவே மாட்டார்
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய
அவரே எனக்காய் யாவும் செய்வார்
எல்லாமே முடிந்து மடிந்தாலும் என் தேவன் விடியலாய் வந்திடுவார்
அவர் வாழ்க வாழ்க என் இயேசு இராசா வாழ்க
2. பூத்திடும் பூவெல்லாம் அவர் அழகு
பார்த்திடும் திசையெல்லாம் தெய்வீகமே
பேச்சிலும் மூச்சிலும் அவர் நாமம்
எப்போதும் என் முன்னால் என் இயேசுதான்
பசியோ பிணியோ வந்தாலும்
இயேசுவின் நாமம் பிரிவதில்லை
வெற்றியோ தோல்வியோ ஆனாலும்
என் வாழ்வின் பரிசு என் இயேசுதான்
அவர் வாழ்க வாழ்க என் இயேசு இராசா வாழ்க
வீழ்வதில்லை நான் விழுவதில்லை
புயல் காற்று என்மேல் மோதினாலும்
சாய்வதில்லை நான் சாவதில்லை
எதிரியின் படையினைத் தாக்கிடவும் உயரிய மதிலைத் தாண்டிடவும்
ஆற்றலும் சக்தியும் எனக்கு உண்டு
இயேசுவின் துணை எனக்கிருப்பதனால்
1. இயேசுவை நம்பி வாழுகிறேன்
அவர் என்னை என்றும் பிரிவதில்லை
இருளிலும் வெயிலிலும் நடந்தாலும்
எனை என்றும் கைவிடவே மாட்டார்
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய
அவரே எனக்காய் யாவும் செய்வார்
எல்லாமே முடிந்து மடிந்தாலும் என் தேவன் விடியலாய் வந்திடுவார்
அவர் வாழ்க வாழ்க என் இயேசு இராசா வாழ்க
2. பூத்திடும் பூவெல்லாம் அவர் அழகு
பார்த்திடும் திசையெல்லாம் தெய்வீகமே
பேச்சிலும் மூச்சிலும் அவர் நாமம்
எப்போதும் என் முன்னால் என் இயேசுதான்
பசியோ பிணியோ வந்தாலும்
இயேசுவின் நாமம் பிரிவதில்லை
வெற்றியோ தோல்வியோ ஆனாலும்
என் வாழ்வின் பரிசு என் இயேசுதான்
அவர் வாழ்க வாழ்க என் இயேசு இராசா வாழ்க