496. மனமே கலக்கம் கொள்ளாதே மனமே வாழ்வில் திகையாதே
மனமே கலக்கம் கொள்ளாதே மனமே வாழ்வில் திகையாதே
உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நான் நடப்பேன்
மனமே மனமே உனைத் தாங்கி நான் சுமப்பேன் - 2
1. மலைகளும் குகைகளும் நகர்ந்தாலும்
மனத்தின் உறுதி பலமாகும்
கடலும் காற்றும் பெயர்ந்தாலும் - 2
காக்கும் உந்தன் கரமாகும்
மழையும் பனியும் என்ன செய்யும்
இரவின் நிலவும் என்ன செய்யும்
உனில் என்றும் உறுதி கொள்வேன்
உனில் என்றும் அமைதி காண்பேன்
2. நன்மையும் தீமையும் மோதினாலும்
இலட்சியத் தேடல் திடமாகும்
இருளும் பகையும் வாட்டினாலும் - 2
உந்தன் நெறிகள் விளக்காகும்
வெயிலும் புயலும் என்ன செய்யும்
இடியும் மின்னலும் என்ன செய்யும்
உன் சொல்லில் பயணம் செய்வேன்
உன் உறவில் விடியல் காண்பேன்
உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நான் நடப்பேன்
மனமே மனமே உனைத் தாங்கி நான் சுமப்பேன் - 2
1. மலைகளும் குகைகளும் நகர்ந்தாலும்
மனத்தின் உறுதி பலமாகும்
கடலும் காற்றும் பெயர்ந்தாலும் - 2
காக்கும் உந்தன் கரமாகும்
மழையும் பனியும் என்ன செய்யும்
இரவின் நிலவும் என்ன செய்யும்
உனில் என்றும் உறுதி கொள்வேன்
உனில் என்றும் அமைதி காண்பேன்
2. நன்மையும் தீமையும் மோதினாலும்
இலட்சியத் தேடல் திடமாகும்
இருளும் பகையும் வாட்டினாலும் - 2
உந்தன் நெறிகள் விளக்காகும்
வெயிலும் புயலும் என்ன செய்யும்
இடியும் மின்னலும் என்ன செய்யும்
உன் சொல்லில் பயணம் செய்வேன்
உன் உறவில் விடியல் காண்பேன்