497. மனவீணை தனில் இன்று உருவாகும் பலராகம்
மனவீணை தனில் இன்று உருவாகும் பலராகம்
உனைப் பாடவேண்டும் என் திருவேந்தனே
மலரோடு மணமாக அகலோடு சுடராக
உன்னோடு நான் வாழ வரவேண்டுமே - 2
1. மனுவாகி நீ தந்த மகிழ்வான செய்தியை
தினம் இந்த இகம் தன்னில் நான் பாடுவேன்
இரவோடு துயரோடு போராடும் பலரோடு
உதயங்கள் வரவேண்டிப் பலரோடு
அருளே ஒளியே உதயம் தருவாய் - 2
திருவே தினமே புனிதம் பொழிவாய்
2. கண்ணீரில் தினம் காணும் எளியோரின் கனவுகள்
என்னன்புப் பணியாலே நனவாகிடும்
நிழல் தேடித் தொடர்கின்ற பலர் வாழ்வுப் பயணங்கள்
திருப்பாத நிழல் தன்னில் சுகம் கண்டிடும் - அருளே
உனைப் பாடவேண்டும் என் திருவேந்தனே
மலரோடு மணமாக அகலோடு சுடராக
உன்னோடு நான் வாழ வரவேண்டுமே - 2
1. மனுவாகி நீ தந்த மகிழ்வான செய்தியை
தினம் இந்த இகம் தன்னில் நான் பாடுவேன்
இரவோடு துயரோடு போராடும் பலரோடு
உதயங்கள் வரவேண்டிப் பலரோடு
அருளே ஒளியே உதயம் தருவாய் - 2
திருவே தினமே புனிதம் பொழிவாய்
2. கண்ணீரில் தினம் காணும் எளியோரின் கனவுகள்
என்னன்புப் பணியாலே நனவாகிடும்
நிழல் தேடித் தொடர்கின்ற பலர் வாழ்வுப் பயணங்கள்
திருப்பாத நிழல் தன்னில் சுகம் கண்டிடும் - அருளே