519. அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே - உம்
பலியோடு சேர்ப்பாய் தூயவனே - 2
1. பொன்னான வாழ்வைப் புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் ஆ - 2
புதிரான வாழ்வே எதிரானதாலே - 2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே - உம்
அருளோடு அணைப்பாய் மாபரனே
2. அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் - 2
திரியாகக் கருகி மெழுகாக உருகி - 2
பலியாக வைத்தோம் ஆண்டவனே - புது
ஒளியாக மாற்றும் தூயவனே
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே - உம்
பலியோடு சேர்ப்பாய் தூயவனே - 2
1. பொன்னான வாழ்வைப் புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் ஆ - 2
புதிரான வாழ்வே எதிரானதாலே - 2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே - உம்
அருளோடு அணைப்பாய் மாபரனே
2. அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் - 2
திரியாகக் கருகி மெழுகாக உருகி - 2
பலியாக வைத்தோம் ஆண்டவனே - புது
ஒளியாக மாற்றும் தூயவனே