முகப்பு


521. இசையிலே நாதம் கேட்டோம் அதிலே
இசையிலே நாதம் கேட்டோம் அதிலே
இன்னருள் வடிவம் கண்டோமே
எழுந்தோம் இறைகுல உரிமையிலே இறைவா ஆ
எழுந்தோம் இறைகுல உரிமையிலே
தொழுதோம் அவரைப் பலியாக

1. படைத்தாய்ப் படைப்பை எமக்காக
படைத்தோம் அதனை உமக்காக
கொடுத்தாய் மகனை எமக்காக தேவா - 2 ஆ
கொடுத்தோம் அவரைப் பலியாக

2. உள்ளம் உள்ளது எம்மிடமே
உரிமையே உண்டு உம்மிடமே
நாங்கள் போவது எவ்விடமே நாதா - 2 ஆ
நாளுமே பணிவோம் உம்மிடமே