536. இரு கரம் ஏந்தி வருகின்றேன்
இரு கரம் ஏந்தி வருகின்றேன்
இறைவா காணிக்கைத் தருகின்றேன் - 2
பரம்பொருளே நான் பலிப்பொருளாய்
உம் திருப்பலியில் இணைகின்றேன்
1. நீரின்றி உலகம் அமைவது ஏது நீயின்றி நானும் அதுபோல்
நீர் தந்த உயிரும் தாய் தந்த உடலும் நீயென மாறிட உமக்கே
கனிரசம் கலந்திடும் நீராய்
இந்தப் பூமிக்குள் மறைந்திடும் வேராய் - 2
இறைவா உனில் நான் கலந்திடுவேன்
2. உலகிற்கு ஒளியாய் உதவிடும் வழியாய்
ஊரெல்லாம் உன்புகழ் பாட
உப்பாய்க் கரைந்து சுவைதரும் பணியில் எப்போதும் நானும் வாழ
நறுமணம் வீசும் பலியாய் இந்த நானிலம் எங்கும் கமழ்வேன் - 2
இறைவா நானோ உன் சொந்தம்
இறைவா காணிக்கைத் தருகின்றேன் - 2
பரம்பொருளே நான் பலிப்பொருளாய்
உம் திருப்பலியில் இணைகின்றேன்
1. நீரின்றி உலகம் அமைவது ஏது நீயின்றி நானும் அதுபோல்
நீர் தந்த உயிரும் தாய் தந்த உடலும் நீயென மாறிட உமக்கே
கனிரசம் கலந்திடும் நீராய்
இந்தப் பூமிக்குள் மறைந்திடும் வேராய் - 2
இறைவா உனில் நான் கலந்திடுவேன்
2. உலகிற்கு ஒளியாய் உதவிடும் வழியாய்
ஊரெல்லாம் உன்புகழ் பாட
உப்பாய்க் கரைந்து சுவைதரும் பணியில் எப்போதும் நானும் வாழ
நறுமணம் வீசும் பலியாய் இந்த நானிலம் எங்கும் கமழ்வேன் - 2
இறைவா நானோ உன் சொந்தம்