முகப்பு


542. இறைவா இறைவா உம் பீடம் வந்தோம்
இறைவா இறைவா உம் பீடம் வந்தோம்
இணைந்த கரத்தில் பலிதர வந்தோம்
உருக்கொடுத்து என்னைத் தந்திடவும்
குழந்தை கண்டிட நிறைவு காணவும்

1. பெற்றுக் கொண்ட நன்மைக்காக நன்றி பாடவும்
நடக்கும் செயல் நலம் பயக்க ஆசிர் வேண்டியும்
காத்திருக்கும் என் கண்கள் விடிவு காணவும்
உம்மோடு நானும் மகிமை செலுத்தவும்

2. விண்ணகம் வாழ் வல்லவரைப் புகழ்ந்து போற்றவும்
உம்மைப் பெறும் திருவிருந்தில் பங்குக் கொள்ளவும்
யாம் இருக்கும் உலகம் இன்று அமைதி காணவும்
வலுவுடனே மக்களும் செழித்து வாழவும்