முகப்பு


566. என்ன என்ன ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம்
என்ன என்ன ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம்
என்னை உனக்குக் கொடுப்பதில் தானே ஆனந்தம்
உன்னில் உனக்காய் வாழ்வது என்னில் ஆனந்தம் - 2

1. கனிகளை ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
கனிவாய் உள்ளம் வேண்டும் என்று நீர் கேட்டீர்
மலர்கள் ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
எனக்காய் மலர வேண்டும் என்று நீர் கேட்டீர்
உன்னில் என்னைத் தந்துவிட்டேன்
உம்பணி செய்யத் துணிந்துவிட்டேன்
என்னை ஏற்று மகிழ்வாயா என்றும் உம்மில் வாழ்ந்திடுவேன்

2. கோதுமை மணிகள் கையில் ஏந்தி நான் வந்தேன்
எனக்காய் வாழவேண்டும் என்று நீர் கேட்டீர்
தீபம் ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
எனக்காய் ஒளிரவேண்டும் என்று நீர் கேட்டீர்
உம்மில் வாழ முடிவெடுத்தேன்
உம்பணி செய்யத் துணிந்துவிட்டேன்
என்னை ஏற்று மகிழ்வாயா என்றும் உம்மில் வாழ்ந்திடுவேன்