முகப்பு


598. காணிக்கை தந்தோம் கர்த்தாவே
காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர் தானே - 2

1. நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது - 2
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் - 2
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உன் அன்பு மாறாது

2. ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே - 2
கண்ணீரைப் போலக் காணிக்கை இல்லை - 2
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே