முகப்பு


604. காணிக்கை தரும் நேரம் நான் என் மனம் தருகின்றேன்
காணிக்கை தரும் நேரம் நான் என் மனம் தருகின்றேன் - 2
ஏற்றருளும் தெய்வமே எளியவர் தருகின்ற காணிக்கையை - 2

1. படைப்புகள் பலவாகினும் பரமன் உமக்கே சொந்தம் - 2
அதில் மலராகும் என் மனம் உன்னிடத்திலே - 2
மனம் காண ஏற்றிடுமே - 2

2. பிறரன்புப் பணிகளெல்லாம் தலைவன் உமதன்றோ - 2
என்றும் உமதன்புப் பணியில் என் வாழ்வினை - 2
பலியாக ஏற்றிடுமே - 2