முகப்பு


611. கானங்கள் பாடும் காலை ஆனந்தமே என் இராகம்
கானங்கள் பாடும் காலை ஆனந்தமே என் இராகம்
அர்ப்பணித்தேன் என் ஆருயிரை
வாழ்வை உன் கரங்களில் கையளித்தேன்

1. உன்மடி அமர்ந்து உன்னையே பழித்தல் உறவென்றாகுமா
உன்மொழி கேட்டும் என் வழி வாழ்தல் உன்னிடம் சேர்க்குமா
உன்பலி தொடர வருகின்றேன்
உள்ளத்தைத் தருகின்றேன் - எந்தன்

2. உழைக்கும் மாந்தர் உயரும் நிலையும் உலகில் மலரணும்
உழைப்பின் மாண்பை வளர்க்கும் செயல்கள்
உண்மையில் நிலைக்கணும் உரிமைகள் உணர்ந்து வருகின்றேன்
உன்னிடம் தருகின்றேன் - என்னை