முகப்பு


670. அருட்கனியே என் அகநிலவே - என்
அருட்கனியே என் அகநிலவே - என்
இருளினை நீக்கிட வா
அருள்மழையே என் உளமதில் மருட்சியை நீக்கிட வா

1. ஆயிரம் வாழ்த்தொலிகள் - உன்னை
ஆராதனை செய்யும் தீபங்களோ
ஆனந்தம் பொழிந்திட வா - இன்ப
ஆறுதல் மொழிந்திட வா - இறைவா

2. நல்லறம் காப்பவனே நீ இல்லாமல்
என் வாழ்வு நன்றாகுமோ
ஆலயம் வாழ்பவனே உள்ள
ஆறுதல் அளித்திட வா - இறைவா