675. அன்பில் விளைந்த அமுதமே
அன்பில் விளைந்த அமுதமே
என்னில் மலர்ந்த தெய்வமே
உயிரில் கலந்த இராகமே உறவில் எரியும் தீபமே - 2
தேவனே இறைவனே தேடி வந்த தெய்வமே - 2
1. தனித்துச் செல்லும் வழிகள் எல்லாம்
தலைவன் உனையே தேடவே - 2
தவித்து ஏங்கும் விழிகள் எல்லாம்
தாகம் கொண்டு நாடவே
அணைத்துச் செல்லும் அன்னையாகி
அழைத்துச் சென்றாய் தெய்வமே
அன்பனே நண்பனே என்னை ஆளும் செல்வமே - 2
2. கல்லும் முள்ளும் காடும் மலையும்
கடந்து செல்லும் வேளையில் - 2
பொழுதும் சாய்ந்து புயலும் ஓய்ந்து
வாழ்க்கைப் படகும் மூழ்கவே
சின்ன எனது இதயம் தனை நீ
சிறகில் அமர்த்தி விரைகிறாய் - அன்பனே
என்னில் மலர்ந்த தெய்வமே
உயிரில் கலந்த இராகமே உறவில் எரியும் தீபமே - 2
தேவனே இறைவனே தேடி வந்த தெய்வமே - 2
1. தனித்துச் செல்லும் வழிகள் எல்லாம்
தலைவன் உனையே தேடவே - 2
தவித்து ஏங்கும் விழிகள் எல்லாம்
தாகம் கொண்டு நாடவே
அணைத்துச் செல்லும் அன்னையாகி
அழைத்துச் சென்றாய் தெய்வமே
அன்பனே நண்பனே என்னை ஆளும் செல்வமே - 2
2. கல்லும் முள்ளும் காடும் மலையும்
கடந்து செல்லும் வேளையில் - 2
பொழுதும் சாய்ந்து புயலும் ஓய்ந்து
வாழ்க்கைப் படகும் மூழ்கவே
சின்ன எனது இதயம் தனை நீ
சிறகில் அமர்த்தி விரைகிறாய் - அன்பனே