677. அன்பின் ஊற்றே அருளின் சுனையே
அன்பின் ஊற்றே அருளின் சுனையே
உன்னை நான் பாடுவேன்
வாழ்வாகும் உந்தன் வார்த்தையைக் கேட்க
மகிழ்வுடன் தினம் நாடுவேன் - 2
கண்ணின் மணிபோல என்னைத் தினம்
காக்கும் அன்புத் தாயாகினாய்
கடலும் மலையும் நான் கடந்து சென்றாலும்
எந்தன் துணையாகினாய்
1. அதிகாலை உதயம் அழகான வானம்
எல்லாம் உன் புகழ்பாடுதே
இதமாக வீசும் இளங்காலைத் தென்றலும்
எல்லாம் உன் அருள்பாடுதே அருட்கடலே ஆண்டவனே - 2
எங்கு நோக்கினும் உந்தன் தரிசனம் அழகின் தரிசனம் தான் சலங்கை ஒலிகளால் இனிய சதிகளால்
உன்னைப்பாடுவேன் நான்
2. இசைப்பாடும் குயிலும் அசைந்தாடும் மயிலும்
எல்லாம் உன் புகழ்பாடுதே
உயர்ந்தோங்கும் மலையும் பாய்ந்தோடும் நதியும்
எல்லாம் உன் அருள்பாடுதே படைப்புகளில் பரம்பொருளே - 2
மனிதம் என்பதும் புனிதம் என்பதும் உந்தன் தரிசனம் தான்
பாக்கள் பாடுவேன் நடனமாடுவேன்
உந்தன் அருளிலே தான்
உன்னை நான் பாடுவேன்
வாழ்வாகும் உந்தன் வார்த்தையைக் கேட்க
மகிழ்வுடன் தினம் நாடுவேன் - 2
கண்ணின் மணிபோல என்னைத் தினம்
காக்கும் அன்புத் தாயாகினாய்
கடலும் மலையும் நான் கடந்து சென்றாலும்
எந்தன் துணையாகினாய்
1. அதிகாலை உதயம் அழகான வானம்
எல்லாம் உன் புகழ்பாடுதே
இதமாக வீசும் இளங்காலைத் தென்றலும்
எல்லாம் உன் அருள்பாடுதே அருட்கடலே ஆண்டவனே - 2
எங்கு நோக்கினும் உந்தன் தரிசனம் அழகின் தரிசனம் தான் சலங்கை ஒலிகளால் இனிய சதிகளால்
உன்னைப்பாடுவேன் நான்
2. இசைப்பாடும் குயிலும் அசைந்தாடும் மயிலும்
எல்லாம் உன் புகழ்பாடுதே
உயர்ந்தோங்கும் மலையும் பாய்ந்தோடும் நதியும்
எல்லாம் உன் அருள்பாடுதே படைப்புகளில் பரம்பொருளே - 2
மனிதம் என்பதும் புனிதம் என்பதும் உந்தன் தரிசனம் தான்
பாக்கள் பாடுவேன் நடனமாடுவேன்
உந்தன் அருளிலே தான்