முகப்பு


704. இயேசுவே என் இராசனே வாழ்வை வழங்க வந்தாய்
இயேசுவே என் இராசனே வாழ்வை வழங்க வந்தாய்
தேவனே என் தெய்வீகனே வார்த்தை உலகில் வந்தாய் - 2

1. மன்னாவை உண்டார்கள் மடிந்தார்கள் - அத்
தண்ணீரைப் பருகியவன் தாகங்கொண்டான் - 2
இயேசுவே என்னை உண்பவன் வாழ்வடைவான்
என்னிடம் வருபவன் தாகம் கொள்ளான்
என்று சொன்னதால் நான் வந்தேன்
நீர் தந்ததால் வாழ்வைக் கண்டேன் வாழ்வைப் பகிர்ந்தளிப்பேன்

2. வானமும் பூமியும் அழிந்துவிடும் - இறை
வார்த்தையோ ஒருநாளும் அழியாது - 2
இயேசுவே தன்னை உயர்த்துவோன் தாழ்வடைவான்
தன்னைத் தாழ்த்துவோன் உயர்வடைவான்
என்று சொன்னதால் நான் வந்தேன்
நீர் வாழ்ந்ததால் அன்பைக் கண்டேன் அன்பாய் வாழ்ந்திடுவேன்