முகப்பு


725. இனிய அன்பு தேவனே எம் இதயம் எழுந்து வாரும்
இனிய அன்பு தேவனே எம் இதயம் எழுந்து வாரும்
இனி எந்தன் வாழ்வு உமதே - 2

1. துன்பங்கள் ஆயிரம் அலைகளாய் என்னிடம் வருகின்றன
அதில் துவண்டு நான் போயினும் - உந்தன்
திருமுகம் காண்கின்றேன்
என்றும் நீ இருக்க எனக்கேன் குறையோ - 2
உயர் இறைவன் அன்பு என்றும் போதுமே
துயர் யாவுமே என்றும் தீருமே

2. தீபம் போல் வாழ்வு உன்முன் என்றும் ஒளிரட்டும்
அதில் சுடர்போல் நானும் என்றும் உன்னால் ஒளிரணும்
என்றும் நீ இருக்கக் குறையே இல்லையே - 2
இந்த இறைவன் கருணை என்றும் போதுமே
எல்லை இன்றியே கடலாகுமே