728. உணவாக எழும் தெய்வமே உறவாட எனில் வாருமே
உணவாக எழும் தெய்வமே உறவாட எனில் வாருமே
தனைத்தந்த தெய்வம் எனையாள வந்தால்
தனிமைகள் பறந்தோடுமே தனி இன்பம் எனைச் சூழுமே
1. பிரிந்ததால் வீழ்ந்திட்ட மானிடத்தை
இணைத்திடத் தோன்றிய தேனமுதே
பகைமையால் வளர்ந்திட்ட பிளவுகளைப்
போக்கிட மலர்ந்திட்ட வான் கவியே
திருஉணவும் திருப்பானமும் உனதுறவை எடுத்துச் சொல்லும் - 2
ஒரு பந்தி சமபந்தி எந்நாளும் மலரச் செய்யும் ஆ ம்
2. காலமெல்லாம் திருஉணவில் தனை வழங்கும்
கரையில்லா உனதன்பை நான் மறவேன்
கலங்கிடும் வேளையில் கைவிடாமல்
கரம்பிடிக்கும் என்தேவா உனைப் பிரியேன்
காத்திருக்கும் கண்களுக்குக் காட்சியாக நீ வருவாய் - 2
கனிவுடனே தங்கிடுவாய் ஏழை என் நெஞ்சினிலே ஆ ம்
தனைத்தந்த தெய்வம் எனையாள வந்தால்
தனிமைகள் பறந்தோடுமே தனி இன்பம் எனைச் சூழுமே
1. பிரிந்ததால் வீழ்ந்திட்ட மானிடத்தை
இணைத்திடத் தோன்றிய தேனமுதே
பகைமையால் வளர்ந்திட்ட பிளவுகளைப்
போக்கிட மலர்ந்திட்ட வான் கவியே
திருஉணவும் திருப்பானமும் உனதுறவை எடுத்துச் சொல்லும் - 2
ஒரு பந்தி சமபந்தி எந்நாளும் மலரச் செய்யும் ஆ ம்
2. காலமெல்லாம் திருஉணவில் தனை வழங்கும்
கரையில்லா உனதன்பை நான் மறவேன்
கலங்கிடும் வேளையில் கைவிடாமல்
கரம்பிடிக்கும் என்தேவா உனைப் பிரியேன்
காத்திருக்கும் கண்களுக்குக் காட்சியாக நீ வருவாய் - 2
கனிவுடனே தங்கிடுவாய் ஏழை என் நெஞ்சினிலே ஆ ம்