முகப்பு


736. உயிரின் ஒளியே உறவொன்று தருவாய்
உயிரின் ஒளியே உறவொன்று தருவாய்
வாழ்வின் வழியே உளம் நின்று பொழிவாய்
உந்தன் திருவுளம் என்னிலே உயிர்த்தெழும்
உனதன்பில் வளர்ந்திடும் நின்பதம் உயர்ந்திடும் - 2
தலைவா உந்தன் திருமுன் சிலிர்த்து நின்றிடும் மனமும்
உந்தன் வழியினில் மலரும் மகிழ்ந்து தொடர்ந்திடும் பயணம்
தலைவா உந்தன் திருமுன் திருமுன்
சிலிர்த்து நின்றிடும் மனமும் மனமும்
உந்தன் வழியினில் மலரும் மலரும்
மகிழ்ந்து தொடர்ந்திடும பயணம் பயணம்
உணர்வுகள் நிலைபெறும் உறவுகள் உரம்பெறும்
உந்தன் மலரடி சரணம் சரணம்

1. உன்னெழில் தரிசனம் என்னகம் மலர்ந்திடும் பரம்பொருளே
ஆதவன் தழுவிடும் குளிர்கொன்றை மலராய்
வாடிடும் இதயத்தில் வசந்தமாய் வந்தாய் வளர்பிறையே
மேற்றிசை மெல்லிய இளந்தென்றல் காற்றாய்
ஆத்துமம் உறையும் ஈகையின் முதல்வா - 2
இதம் நிதம் வரைந்தாய் இசையாகி நிறைந்தாய்

2. தாகங்கள் தவிப்புகள் உலர்த்திடும் உன்னருள் வானமுதே
சூரியன் சுகித்திடும் வெண்பனித்துளியாய்
உன் பணிபுரிவதில் என் மனம் நிறைந்திடும் தேன்சுனையே
புவியினில் புரிந்திடும் வான்மழை முகிலாய்
இயற்கையில் இயங்கிடும் ஈசனே இறைவா - 2
இறைவிதை பொழிந்தாய்த் திருச்சபை மலர்ந்தாய்