773. எழுவீர் இறைவா ஏழையின் உளமே
எழுவீர் இறைவா ஏழையின் உளமே
எழிலே வாழ்வில் தருவீர் வளமே - 2
1. பாலை நிலத்தில் பசித்த முன்னோர்
புசிக்கும் உணவாய் அளித்தீர் மன்னா - 2
பாரில் வாடும் மாந்தர் நாடும் பரம உணவே வா
2. வாழ்வில் வழியும் நீரே என்றீர்
வானோர் அமுதம் எமக்கு ஈந்தீர் - 2
பாறை பிளந்தே பானம் அளித்த சீவிய சுனையே வா
3. பேழையில் உறைந்த ஏழையின் விருந்தே
வேளையில் உதவும் தெய்வீக மருந்தே - 2
பனிமலை உருக்கும் பகலவன் போல பாவத்தைப் போக்கிட வா
எழிலே வாழ்வில் தருவீர் வளமே - 2
1. பாலை நிலத்தில் பசித்த முன்னோர்
புசிக்கும் உணவாய் அளித்தீர் மன்னா - 2
பாரில் வாடும் மாந்தர் நாடும் பரம உணவே வா
2. வாழ்வில் வழியும் நீரே என்றீர்
வானோர் அமுதம் எமக்கு ஈந்தீர் - 2
பாறை பிளந்தே பானம் அளித்த சீவிய சுனையே வா
3. பேழையில் உறைந்த ஏழையின் விருந்தே
வேளையில் உதவும் தெய்வீக மருந்தே - 2
பனிமலை உருக்கும் பகலவன் போல பாவத்தைப் போக்கிட வா