முகப்பு


775. என் அன்புத் தாயாக எனைக்காக்கும் இறைவா
என் அன்புத் தாயாக எனைக்காக்கும் இறைவா
உனையன்றிச் சொந்தங்கள் வேறில்லையே - 2
என் உறவானவா என் உயிரானவா
என் வாழ்வெல்லாம் நீயே துணையாகவா

1. கரங்களில் என்னைப் பொறித்தவரே
உன் தோளினில் என்னைச் சுமந்தவரே
கருணையின் மழையே தெய்வமே
காலங்கள் கடந்த பரம்பொருளே
கண்ணின் மணியாய்க் காப்பவரே
தாய்மையின் உருவம் ஆனவரே
ஏழிசை மீட்டியே இறை உன்னைப் புகழ்வேன்
உன் பதம் பணிவேன் மாபரனே
பொன்மனம் படைத்தவன் புகழினைப் பாடுவேன்
கரு முதல் காக்கும் தாயவனே - 2

2. வியத்தகு இறைவனின் படைப்புகள் எல்லாம்
உயிரே உந்தன் அருள் கொடையே - 2
துணையாய் இருப்பது நீயென்றால்
தோல்வியைக் கண்டு பயமேதேன்
வறியவர் வாழ்வில் வளம் சேர்க்க
வாழ்வை முழுவதும் உமக்களித்தேன் - ஏழிசை மீட்டியே