முகப்பு


782. என் இறைவன் இயேசு என் இதயம் தேடி
என் இறைவன் இயேசு என் இதயம் தேடி
எழுந்து வரும் வேளையிது
உணவாய் எழுந்து வரும் வேளையிது

1. அன்பு செய்து வாழுங்கள் என்று சொன்ன இயேசுவே
நமது இதயம் தேடி வருகிறார்
பாவக் கறைகள் போக்கியே பரிசுத்தமாக்கவே
பரமன் இயேசு நம்மில் வருகிறார்
முடிவில்லாத வாழ்வையே மானிடருக்கு அருளவே
மாட்சியோடு தேவன் வருகிறார் ஆ
அழிவில்லாத உணவெனத் தன்னையே தந்து நம்
ஆத்துமாவின் பசியைப் போக்கினார்

2. வெறுமையான என்னையே செல்வராக ஆக்கிட
இயேசு என்னைத் தேடி வருகிறார்
பிரிவில்லாத உறவையே நிரந்தரமாய்த் தந்திட
மகிழ்ச்சியோடு விருந்து தருகிறார்
இறைவன் என்னில் எழுந்ததால் இன்பம் என்னில் நிறைந்ததால்
துயர மேகம் கலைந்து போனதே ஆ
இதயக்கதவு திறந்ததால் புதிய ஒளி பிறந்ததால்
இருளின் ஆட்சி மறைந்து போனதே