789. என் தெய்வம் என் சொந்தம்
என் தெய்வம் என் சொந்தம்
என்னோடு வாழும் என் சீவ சங்கீதமே
எனக்காக எல்லாமும் எனதாக்க சீவன்
எந்நாளும் உமைப் பாடுதே - 2
1. நான் வாழும் வாழ்வெல்லாம் நானல்ல நாதா
நீயின்றி வாழ்வேதையா
காண்கின்ற யாவும் என் கர்த்தாவே தேவா
கவிபாடும் கலைக்கூடமே
என்பாடல் உன்னோடு எந்நாளும் வாழும்
என் இதயம் நீர் மீட்டவே
பாடும் சங்கீதம் பரமன் உன் கீதம்
பார் போற்றும் தேவா நீர் வந்தாள வேண்டும்
2. நதிபாடும் கடல்பாடும் நிலமெல்லாம் பாடும்
நின் அன்பின் நிறைவாகவே
நிழல் தேடும் நெஞ்சங்கள் நின் அன்பில் வாழும்
நிறைவோடு நிறைவாகவே
வசந்தங்கள் என் வாழ்வில் வருமின்ப வேளை
வான் நோக்கும் என் கண்களே
வரம் வேண்டி நாளும் வாழ்கின்ற சீவன்
வளம் ஈந்து என்னில் தினம் வாழ்கின்ற தேவன்
என்னோடு வாழும் என் சீவ சங்கீதமே
எனக்காக எல்லாமும் எனதாக்க சீவன்
எந்நாளும் உமைப் பாடுதே - 2
1. நான் வாழும் வாழ்வெல்லாம் நானல்ல நாதா
நீயின்றி வாழ்வேதையா
காண்கின்ற யாவும் என் கர்த்தாவே தேவா
கவிபாடும் கலைக்கூடமே
என்பாடல் உன்னோடு எந்நாளும் வாழும்
என் இதயம் நீர் மீட்டவே
பாடும் சங்கீதம் பரமன் உன் கீதம்
பார் போற்றும் தேவா நீர் வந்தாள வேண்டும்
2. நதிபாடும் கடல்பாடும் நிலமெல்லாம் பாடும்
நின் அன்பின் நிறைவாகவே
நிழல் தேடும் நெஞ்சங்கள் நின் அன்பில் வாழும்
நிறைவோடு நிறைவாகவே
வசந்தங்கள் என் வாழ்வில் வருமின்ப வேளை
வான் நோக்கும் என் கண்களே
வரம் வேண்டி நாளும் வாழ்கின்ற சீவன்
வளம் ஈந்து என்னில் தினம் வாழ்கின்ற தேவன்