797. என் சீவநாயகா எனையாளும் என் மன்னவா
என் சீவநாயகா எனையாளும் என் மன்னவா
உன் நாமம் நான் பாடவா உன்னோடு ஒன்றாகவா
நிதம் பாடும் சீவன் உன்னையே
1. என்றும் உன் நினைவில் உன்னுறவில்
உலகமெல்லாம் உன் சிறகில்
உயிர்வாழ நான் காண்கின்றேன்
மண்ணில் வாழுகின்ற காலமெல்லாம்
வந்து விடும் வசந்தங்களும் உன்னன்பில் நான் வாழவே
உந்தன் அன்பு ஒன்றே போதுமே எந்தன் துன்பம் தூரப் போகுமே
என்றும் வாழும் தேவனே என்னை ஆளும் நாதனே
நிதம் பாடும் சீவன் உன்னையே
2. தேவன் நீ எழுதும் கவிதைகளே
நின் அன்பில் சங்கமமே எனைத் தேடும் நெஞ்சங்களே
எங்கும் உன்முகம் தான் காணுகின்றேன்
உன் உறவில் வாழுகின்றேன் உயிரோடு உயிராகவே
என்னில் வாழும் சீவநாதனே என்றும் வாழும் தேவநாமமே
தேடும் அன்பு தெய்வமே நாடும் யாவும் உம்மையே
நிதம் பாடும் சீவன் உன்னையே
உன் நாமம் நான் பாடவா உன்னோடு ஒன்றாகவா
நிதம் பாடும் சீவன் உன்னையே
1. என்றும் உன் நினைவில் உன்னுறவில்
உலகமெல்லாம் உன் சிறகில்
உயிர்வாழ நான் காண்கின்றேன்
மண்ணில் வாழுகின்ற காலமெல்லாம்
வந்து விடும் வசந்தங்களும் உன்னன்பில் நான் வாழவே
உந்தன் அன்பு ஒன்றே போதுமே எந்தன் துன்பம் தூரப் போகுமே
என்றும் வாழும் தேவனே என்னை ஆளும் நாதனே
நிதம் பாடும் சீவன் உன்னையே
2. தேவன் நீ எழுதும் கவிதைகளே
நின் அன்பில் சங்கமமே எனைத் தேடும் நெஞ்சங்களே
எங்கும் உன்முகம் தான் காணுகின்றேன்
உன் உறவில் வாழுகின்றேன் உயிரோடு உயிராகவே
என்னில் வாழும் சீவநாதனே என்றும் வாழும் தேவநாமமே
தேடும் அன்பு தெய்வமே நாடும் யாவும் உம்மையே
நிதம் பாடும் சீவன் உன்னையே