முகப்பு


805.என்னைத் தேடிவந்து நாடி வந்து
என்னைத் தேடிவந்து நாடி வந்து
என்றும் தேற்றிடும் தேனமுதே
எந்தன் பாவம் போக்க பசியைப் போக்க
தன்னை உணவாய்த் தந்தவரே
அன்பாய் வருவாய் என்னுள்ளே
அமைதி தருவாய் மனத்தினிலே

1. வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச
விடியல் என்றும் என் வாழ்வில் காண
உலகிற்கு வந்தவரே
நன்மை என்றும் என் வாழ்வில்
உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர
உணவான அருமருந்தே - அன்பாய்

2. புதுமை என்றும் என் வாழ்வில் பெருக
இனிமை என்றும் என் வாழ்வில் தொடர
உறவான நல்உணவே
அன்பு என்றும் என் வாழ்வில் காண
அன்பாய் ஒளிர்பவரே - அன்பாய்