முகப்பு


811. எனையாளும் அன்பே என் இறைவா
எனையாளும் அன்பே என் இறைவா
நீ வரும் நேரம் நான் மலர்ந்தேன்
உன்னருளின் உன்னதத்தில்
உள்ளமெல்லாம் நிறைந்து நின்றேன்
இனி நான் மறைந்து போய்விடுவேன்
வருகிறான் இறைவன் அன்பைத் தருகிறான் தலைவன்

1. சொல்லாத நேசங்களை உன்
தியாகத்தில் சொல்லித் தந்தாய் - நீ
இல்லாத குறை நீங்கவே உணவாக உடலைத் தந்தாய்
கல்லாகிப் போனேனே கருணாளனே - 2
உனது கரத்தின் சிற்பங்களாக என்னை மாற்றுவாய்
வருகிறான் இறைவன் அன்பைத் தருகிறான் தலைவன்

2. எழுந்து நான் செல்லுவேன் - என்
தந்தையின் இல்லம் நோக்கி - வெகு
தூரம் விலகிச் சென்றேன் உந்தன் அன்பை மறந்து நின்றேன்
காலம் கடந்து வந்தேன் கருணாளனே - 2
பாசம் கொண்டு என்னை ஏற்றுப் பகிர்வு கொண்டாடச் செய்வாய்
வருகிறான் இறைவன் அன்பைத் தருகிறான் தலைவன்