முகப்பு


814. ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே - என்
ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே - என்
பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே - 2
அலகை வலையில் அடிமையாகி
அமைதியின்றி அலைகின்றேன்
வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே

1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே - நீர்
குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ - 2
பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே
தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ

2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன் - உம்
மலர்ப்பதத்தைக் கழுவித் துடைக்கக்
கண்ணீர் வடிக்கின்றேன் - 2
சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே
உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்