முகப்பு


822. கண்விழிபோல் காக்கும் எந்தன் சொந்தம் நீயே
கண்விழிபோல் காக்கும் எந்தன் சொந்தம் நீயே
உன் கரங்களில் பொறித்து என்னைப் படைத்தாய் நீயே
என்றென்றும் தேடிவரும் அருள் தெய்வமே
என உள்ளத்தில் குடிகொள்ளும் என் இயேசுவே
வாரும் வாரும் அருள்தாருமே - 2

1. வானோர்கள் பாடும் சங்கீத குரலில்
என் நாவும் உன் புகழை இசைபாடுமே
அன்னை மரியாளின் குரலில் புகழ்பாடும் இசையில்
என்பாடல் உன் அருளைப் புகழ்ந்தேற்றுமே
உன்னையே நாடி உயிர் வாழ்கிறேன்
என் தெய்வமே உன்னைத் தினம் நாடுவேன்
என் வளமே என் வாழ்வே என் தோழனே
என் மனமும் உன் உறவில் இணைந்தாகுமே
உனதொளியில் உனதாற்றலில்
உலகில் எங்கும் உனைப்புகழ

2. அன்பே அமுதே அருளின் உருவே
என்றென்றும் உள்உருகித் தொழுதிடுவேன்
உண்மை வழியே உயிரின் ஊற்றே
உடல்தந்து உயிர்தந்து மீட்பவரே
காலங்கள் தோறும் உனைப் போற்றுவேன்
என் சொல்லால் என்றும் பணியாற்றுவேன் - என் வளமே