முகப்பு


833. சிறகுகள் தா இறைவா நான்
சிறகுகள் தா இறைவா நான்
சிகரங்கள் காண வேண்டும்
உறவாய் வா தலைவா - உள்ளம்
நிறைவினில் இதயம் நீ வந்தாலே நிறையும்
அருமையான அன்பில் நனைந்தாலே மகிழ்வேன்

1. நீ தந்த நல்பாதையை மறந்து திசை மாறித் திரிந்தேன்
தீ போல என்னைத் துன்பம் சூழ சுயம் இழந்து வீழ்ந்தேன் அ ஆ
ஒடிந்து வீழும் மனச்சிறகு உயர பறக்க வலு தா
உள்ளம் உணர்ந்து கொண்டால் உள்ளம் தெளிவு கொள்வேன்
வருவாயே என் உள்ளே

2. உன் சொல்லைத் தான் மறந்தேன் பாரங்கள் சுமந்தேன்
உன் அன்பின் மழையில் நனைந்தேன் உள்ளாற்றல் அறிந்தேன் அ ஆ
இருள் சூழும் பொழுதுகளில் எனைக் காக்க கரம் தா
மனம் வெம்பி நின்றேன் உனை நம்பி வந்தேன்
சொல்லாயோ பதில் ஒன்று