முகப்பு


843. தன்னை வழங்கும் தலைவன் தந்த விருந்திது - இந்த
தன்னை வழங்கும் தலைவன் தந்த விருந்திது - இந்த
தரணி மாந்தர் வாழ நல்ல மருந்திது - 2
உள்ளங்களில் ஆட்சி செய்ய வந்தது - நாளும்
உண்மையின் சாட்சியாக அழைக்குது

1. அவல நிலையில் உள்ளோர்க்கு அமைதி தரும் - இது
உரிமை இழந்த மனிதருக்கு சக்தி தரும் - 2
அன்பு நீதி நேர்மையுள்ள ஆட்சியைத் தேடும் - 2 - நம்
உள்ளத்தில் உறைந்து உணர்வினில் கலந்திட

2. காலந்தோறும் கண்ணிமை போல் நம்மைக் காக்கும் - இது
கறைகள் நிறைந்த இதயத்தினைத் தேடிவரும் - 2
மனிதநேயம் மானிடரில் காண ஏங்கிடும் - 2 - நம்
மனக்கவலைகளை மகிழ்ச்சியால் நிறைத்திட