முகப்பு


853. தேவகுமாரா கேட்கிறதா என் தியானகீதம் கேட்கிறதா
தேவகுமாரா கேட்கிறதா என் தியானகீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் எனை மட்டும் பார்க்கிறதா - 2

1. உன்னைக் காண விழி கொடுத்தாய்
உன்னைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உன்னை நினைத்து உருகி விட்டேன்
என்னை உனக்கே கொடுத்து விட்டேன் - 2
உனக்கே என்னைக் கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளம் வருகிறது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப் போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது - உன்னை