854. தேவன் என்னைத் தேடி வரும் நேரம்
தேவன் என்னைத் தேடி வரும் நேரம்
ஆனந்தக் கவிதைகள் இதயத்தில் அரங்கேறும்
அந்த இதயம் பாடும் புது கீதம்
இந்த உலகம் காணும் புது உதயம்
1. வானம் பார்க்கும் பூமியைப் போலென்
மனமும் உன் முகம் பார்க்கின்றதே
அருளின் முகிலே வா அன்பின் மழையே வா
நிறைவினில் நிதம் நான் வாழ்ந்திடவே
நிறைவினில் உறவுகள் மலர்ந்திடவே
2. நீரினை நாடும் மான்களைப் போலென்
நெஞ்சம் உன்னகம் தேடுதே
நீதியின் கதிரே வா தீதில்லா திருவே வா
இழப்பதில் இன்பம் கண்டிடவே
இகமெல்லாம் ஒன்றெனக் கொண்டிடவே
ஆனந்தக் கவிதைகள் இதயத்தில் அரங்கேறும்
அந்த இதயம் பாடும் புது கீதம்
இந்த உலகம் காணும் புது உதயம்
1. வானம் பார்க்கும் பூமியைப் போலென்
மனமும் உன் முகம் பார்க்கின்றதே
அருளின் முகிலே வா அன்பின் மழையே வா
நிறைவினில் நிதம் நான் வாழ்ந்திடவே
நிறைவினில் உறவுகள் மலர்ந்திடவே
2. நீரினை நாடும் மான்களைப் போலென்
நெஞ்சம் உன்னகம் தேடுதே
நீதியின் கதிரே வா தீதில்லா திருவே வா
இழப்பதில் இன்பம் கண்டிடவே
இகமெல்லாம் ஒன்றெனக் கொண்டிடவே