855. தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா
தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா
தேவா உந்தன் வான்புகழைப் பாட வரம் தா - 2
உன்னருள் மேன்மையால் பூமி எங்கும் புன்னகை
உன் புகழ் பாடவே பொங்கி வரும் வல்லமை - 2
மனமார வாழ்த்த எழும் இறையரசின் வைகறை
1. நான் எந்தன் வேலியாக என்னலம் கொண்டேன் - நீ
பூமி எங்கும் வாழும் தென்றலாகினாய் - 2
உன்னொளி காண காண உள்ளம் மலர வேண்டுமே
உன் வழி போக போக உறவும் பெருக வேண்டுமே - 2
இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே
2. நான் சிறு கணம் எரியும் ஒளித்துகளானேன் - நீ
அதை ஏற்றி வைத்த ஒளிக் கடலானாய் - 2
உன் பணி செய்வதிலே எந்தன் ஆசை தீரவே
தன் தலை தியாகம் ஏற்கும் தீபவாழ்வைப் போலவே - 2
இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே
தேவா உந்தன் வான்புகழைப் பாட வரம் தா - 2
உன்னருள் மேன்மையால் பூமி எங்கும் புன்னகை
உன் புகழ் பாடவே பொங்கி வரும் வல்லமை - 2
மனமார வாழ்த்த எழும் இறையரசின் வைகறை
1. நான் எந்தன் வேலியாக என்னலம் கொண்டேன் - நீ
பூமி எங்கும் வாழும் தென்றலாகினாய் - 2
உன்னொளி காண காண உள்ளம் மலர வேண்டுமே
உன் வழி போக போக உறவும் பெருக வேண்டுமே - 2
இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே
2. நான் சிறு கணம் எரியும் ஒளித்துகளானேன் - நீ
அதை ஏற்றி வைத்த ஒளிக் கடலானாய் - 2
உன் பணி செய்வதிலே எந்தன் ஆசை தீரவே
தன் தலை தியாகம் ஏற்கும் தீபவாழ்வைப் போலவே - 2
இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே