முகப்பு


860.நற்கருணை ஆண்டவரே அன்பு நேசரே
நற்கருணை ஆண்டவரே அன்பு நேசரே
தினமும் என்னை வாழ வைக்கும் அருள்நாதரே - 2
தேடி வந்தேன் உந்தன் பாதம் வரம் தாருமே - 2
நாடி வந்தேன் உந்தன் அன்பில் நான் மகிழவே - 2
வா இறைவா வா வாழ வைக்க வா
தா இறைவா தா உன்னை எனக்குத் தா - 2

1. அதிகாலை எழும்போது ஆற்றலாக வா
அனுதினமும் அன்பில் வளர அன்னையாக வா - 2
துன்பம் என்னைச் சூழும்போது இன்பமாக வா - 2
துள்ளித் துள்ளி மகிழும் போது தோழனாக வா - 2
- வா இறைவா வா

2. கண்மூடித் தூங்கும் போது காவலாக வா
கவலையினால் கலங்கும்போது கரம் பிடிக்க வா - 2
சொந்தமின்றி வாடும்போது பந்தமாக வா - 2 நான்
சொர்க்கம் இங்கே உண்டு என்று சொல்லித் தர வா - 2
- வா இறைவா வா