முகப்பு


862. நாளெல்லாம் நினைந்தேன் நலம்தரும் உணவே
நாளெல்லாம் நினைந்தேன் நலம்தரும் உணவே
வாழ்வுக்கு நீரே ஆதரவே - 2

1. வானிலிருந்து இறங்கிய விருந்தே
தான் எனப் பகர்ந்தாய்த் தவறில்லா தலைவா
ஏன் எனக்கே இனி வீண் தயக்கம்
தெளிதேன் சுவை நீ என யான் அறிந்தேன்

2. உண்மையின் அரசே உணர்ந்திட்ட மொழியே
என்னுள்ளத்தினிலே எழுந்திடும் உறுதி
காரணமாம் விசுவாசமுமாம்
நிறைபேறு மகிழ்வாம் அருள் பூரணமாம்