880.நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் சீவனே - 2
தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
பாடாத நாவும் உன்னைப் பாடவே - 2
1. தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே - 3
வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே - 3
இமைகளில் இருந்து நீ சுமைகள் தாங்கும் சொந்தமாகினாய்
அகத்தினில் அமைதியைத் தந்திடும் எந்தன் தந்தையாகினாய்
உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே - 2
2. வானத்தின் மழைத்துளி மண்ணைத் தேடுதே - 3
ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே - 3
மேகமாய்த் திரண்டு நீ அருளைப் பொழியும் அண்ணலாகினாய்
தேகமாய் வந்து நீ தெவிட்டா உணவின் சுவையாகினாய்
- உன்னைத் தேடாத
கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் சீவனே - 2
தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
பாடாத நாவும் உன்னைப் பாடவே - 2
1. தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே - 3
வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே - 3
இமைகளில் இருந்து நீ சுமைகள் தாங்கும் சொந்தமாகினாய்
அகத்தினில் அமைதியைத் தந்திடும் எந்தன் தந்தையாகினாய்
உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே - 2
2. வானத்தின் மழைத்துளி மண்ணைத் தேடுதே - 3
ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே - 3
மேகமாய்த் திரண்டு நீ அருளைப் பொழியும் அண்ணலாகினாய்
தேகமாய் வந்து நீ தெவிட்டா உணவின் சுவையாகினாய்
- உன்னைத் தேடாத