முகப்பு


883. பண்பாடி நாளும் பதம் தேடிவந்தேன்
பண்பாடி நாளும் பதம் தேடிவந்தேன்
அகம் வந்து என்னை அருள் செய்ய வாராய்
மருள்நிறை வாழ்வில் நான் வாடும் போது
இருள் போக்க இறையே நீ எழுவாயே - 2

1. உள்ளத்தின் ஏக்கங்கள் நிதம் வாட்டுதே
உன்னன்பு தொடுதல்கள் எனைத் தேற்றுதே - 2
உதிர்த்திடும் கண்ணீர் உன் முன்னே மலராய் - 2
உருமாறி ஒன்றாய் கரம் கோர்த்து நிற்கும்
உவப்புடன் உன்னை அணி செய்து மகிழும்

2. கன்னல் போல் உன்னை நான் சுவைத்திடுவேன்
கார்மேக மழையுன்னில் நனைந்திடுவேன்
கனிவுறு வார்த்தைகள் உதிர்த்திடும் போது - 2
கறை நீங்கி என் வாழ்வும் கனிவாக ஒளிரும்
கதிரான உன்னைக் கனவாகக் காணும்