884. பாட்டு நான் பாடக் கேட்டு
பாட்டு நான் பாடக் கேட்டு
என் பாடல்நாயகா விருந்தாக வா வா
உன் அன்பில் நான் இன்று ஒன்றாக வேண்டும்
உன்னாலே என் வாழ்வு நன்றாக வேண்டும்
1. இராகங்கள் இல்லாத வாழ்வெனும் வீணையில்
கானங்கள் அரங்கேறும் உன் வரவால் - இறைவா
சோகங்கள் மறைந்தோடும் உன் உறவால்
இருளோடும் துயரோடும் போராடும் என் வாழ்வில்
அருளாலே விளக்கொன்று நீ ஏற்ற வா
அதை நானும் அணையாமல் நான் காக்க வா
2. மாதங்கள் பன்னிரண்டும் தேவா உன் திருவாசல்
மானிடரின் வரவுக்காய்க் காத்திருக்கும் - தினம்
மாறாத அன்புக்காய்ப் பூத்திருக்கும்
நீ வாழும் கோயில் தான் ஏழை என்னுள்ளம்
உனை உண்டு வாழ்ந்தாலே அழிவில்லையே
உனைவிட்டுப் பிரிந்தாலே அருளில்லையே
என் பாடல்நாயகா விருந்தாக வா வா
உன் அன்பில் நான் இன்று ஒன்றாக வேண்டும்
உன்னாலே என் வாழ்வு நன்றாக வேண்டும்
1. இராகங்கள் இல்லாத வாழ்வெனும் வீணையில்
கானங்கள் அரங்கேறும் உன் வரவால் - இறைவா
சோகங்கள் மறைந்தோடும் உன் உறவால்
இருளோடும் துயரோடும் போராடும் என் வாழ்வில்
அருளாலே விளக்கொன்று நீ ஏற்ற வா
அதை நானும் அணையாமல் நான் காக்க வா
2. மாதங்கள் பன்னிரண்டும் தேவா உன் திருவாசல்
மானிடரின் வரவுக்காய்க் காத்திருக்கும் - தினம்
மாறாத அன்புக்காய்ப் பூத்திருக்கும்
நீ வாழும் கோயில் தான் ஏழை என்னுள்ளம்
உனை உண்டு வாழ்ந்தாலே அழிவில்லையே
உனைவிட்டுப் பிரிந்தாலே அருளில்லையே