890.பொன்மாலை (காலை) நேரம் பூந்தென்றல் காற்றில்
பொன்மாலை (காலை) நேரம் பூந்தென்றல் காற்றில்
என் சீவராகம் கரைந்தோடுதே
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்பமேகம் கலைந்தோடுதே
உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்
1. நீ இல்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் - உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் தான்-2
காலந்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே
என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வர வேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னைச் சிறகில் மூடுமே... ஆ... ம்...
2. ஒருகணம் என் அருகினில் நீ அமரும் போது ஒரு யுகம்
உனைத் தினம் நான் புகழ்கையில்எனக்குள் தோன்றும் புதுயுகம் - 2
முள்ளில் பூக்கும் ரோசா என்னை அள்ளிப் பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் இறையே எந்தன் இதயம் உன் அன்பைப் பாடுதே... ஆ... ம்...
என் சீவராகம் கரைந்தோடுதே
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்பமேகம் கலைந்தோடுதே
உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்
1. நீ இல்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் - உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் தான்-2
காலந்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே
என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வர வேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னைச் சிறகில் மூடுமே... ஆ... ம்...
2. ஒருகணம் என் அருகினில் நீ அமரும் போது ஒரு யுகம்
உனைத் தினம் நான் புகழ்கையில்எனக்குள் தோன்றும் புதுயுகம் - 2
முள்ளில் பூக்கும் ரோசா என்னை அள்ளிப் பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் இறையே எந்தன் இதயம் உன் அன்பைப் பாடுதே... ஆ... ம்...