900.வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே
வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே
நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி
எனைத் தாங்கும் என் தெய்வமே
என் நிழலாக எழும் தெய்வமே
1. எந்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன்
உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் - 2
நீரின்றியே மண்ணில் வளமில்லையே
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
எனைத் தாங்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே
நிலமெங்கும் ஒளிர்ந்தாலும் விழி மூடி பயன் ஏது
துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகை ஏது
பலனாகக் கை மீது வா இங்குப் புலனாகும் இறையாக வா
2. என் பாதை முடிவாகும் உன் தாளிலே
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே - 2
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
உன் பார்வைகள் என் வழியாகுமோ
இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர் வீச எனை ஏற்றவா
ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே
விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன் தானே
நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன் காண வா
நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி
எனைத் தாங்கும் என் தெய்வமே
என் நிழலாக எழும் தெய்வமே
1. எந்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன்
உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் - 2
நீரின்றியே மண்ணில் வளமில்லையே
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
எனைத் தாங்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே
நிலமெங்கும் ஒளிர்ந்தாலும் விழி மூடி பயன் ஏது
துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகை ஏது
பலனாகக் கை மீது வா இங்குப் புலனாகும் இறையாக வா
2. என் பாதை முடிவாகும் உன் தாளிலே
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே - 2
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
உன் பார்வைகள் என் வழியாகுமோ
இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர் வீச எனை ஏற்றவா
ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே
விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன் தானே
நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன் காண வா