906.வாழ்வின் இனிமை வழங்கும் கனியே
வாழ்வின் இனிமை வழங்கும் கனியே
வளமாய் எம்மில் தவழ்க - 2
1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்
இருளின் துயரம் விலக - 2
இறைவன் உவந்து வழங்கும் கனியாய்
அருளைப் பொழிந்தே வருக
2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்த்
துலங்கும் இறைவா வருக - 2
தேய்வு தொடராப் புதுமை நிலவாய்த்
திகழும் வாழ்வைத் தருக
3. தனிமை நலிந்து இனிமை பொழிந்து
புனித இதயம் பெறவே - 2
புனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய்க்
கனிவாய் எழுந்தே வருக
வளமாய் எம்மில் தவழ்க - 2
1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்
இருளின் துயரம் விலக - 2
இறைவன் உவந்து வழங்கும் கனியாய்
அருளைப் பொழிந்தே வருக
2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்த்
துலங்கும் இறைவா வருக - 2
தேய்வு தொடராப் புதுமை நிலவாய்த்
திகழும் வாழ்வைத் தருக
3. தனிமை நலிந்து இனிமை பொழிந்து
புனித இதயம் பெறவே - 2
புனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய்க்
கனிவாய் எழுந்தே வருக