முகப்பு


921. வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா
வாழ்வு மலர்ந்திட வான்மழையென வா
வழி இருளினிலே வளர்மதி என வா - இங்குப்
பாடும் இந்த சீவனிலே பரமனே நீ வா

1. அலைகளில்லா கடல் நடுவே பயணமென என் வாழ்வு
அமைதி எங்கும் அமைதி எனப் பயணமதை நான் தொடர - 2
இறைவா என் இறைவா இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய்
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா

2. இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும்
எனைப்பிரியா நிலையெனவே இணைப்பிரியா துணையெனவே
- இறைவா என் இறைவா