முகப்பு


930. இணையில்லா இறைவனின் திருப்புகழை
இணையில்லா இறைவனின் திருப்புகழை
அனைவரும் இணைந்தே பாடுவோம்

1. அருள்நிறை ஆயன் அக்களித்து
ஆனந்தத்தில் நம்மை மூழ்கடித்து
பரம்பொருள் அவர் பதம்தனையே - நாம்
பணிவுடன் போற்றிப் பாடிடுவோம்

2. வானுற உயர்ந்த மலைகளுமே
வண்ண எழில் நிறை மலர்களுமே
உனைத் தேடும் சின்ன உயிர்களுமே - நிதம்
உன்னத இறைவனை வாழ்த்திடுமே

3. உலகத்தின் ஒளியாய் நாமிருப்போம்
உடல் உயிர் அனைத்தையும் சேர்ந்தளிப்போம்
மகிழ்வுடன் இந்த உறுதி கொள்வோம்
அதை மங்காது வாழ்வில் பகிர்ந்தளிப்போம்