முகப்பு


934. இந்தநாள் வரையிலும் காத்துக் கொண்டாரே
இந்தநாள் வரையிலும் காத்துக் கொண்டாரே
இனி வருகின்ற நாளும் கைவிடமாட்டார்

1. கடந்த காலம் எண்ணி நான் கலங்கிட மாட்டேன்
கசந்த வாழ்வை எண்ணி நான் சோர்ந்திட மாட்டேன்
நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவரே
இருக்கிறவர் அவரன்றோ புதியன செய்தார்

2. வறுமையிலும் வளமையிலும் வாழத் தெரியுமே
எந்நிலையிலும் போதுமென்று வாழ்ந்திடுவேனே
குறைவு எல்லாம் நிறைவுபெறச் செய்பவர் அவரே
ஆண்டவருக்குள் அகமகிழ்வேன் ஆற்றல் பெற்றிடுவேன்