944. உலகமே ஒரு குடும்பமாகும் உறவில் நாம் வளர்ந்தாலே
உலகமே ஒரு குடும்பமாகும் உறவில் நாம் வளர்ந்தாலே
நானிலங்கள் நிறைவைக் காணும்
வளங்கள் கூடும் உறவு சேரும்
இணைந்து நாம் மகிழ்ந்தாலே - 2
1. மண்ணும் வளமும் பொருளும் திறனும்
மனித வாழ்வின் கொடைகளே
தன்னலங்கள் வளர்ந்ததாலே
பிரிவும் பகையும் மலிந்ததே - 2
ஒன்றாகும் எண்ணங்கள் ஓங்கி இன்று
உண்மைகள் உயிர் பெற்று உயரட்டும் - 2
உதிக்கும் உறவில் பிறக்கும் புதுயுகம்
அனைத்தும் சமமென ஆகட்டும் - 2
2. கலையில் கல்லும் கனிதல் போலே
கருணை ஒன்றே போதுமே
கடின மனமும் கரைவதாலே
மனித மாண்பும் உயருமே - 2
பரந்த உள்ளங்கள் அதிகமாக
அமைதி ஆற்றலும் செழிக்கட்டும் - 2 - உதிக்கும்
நானிலங்கள் நிறைவைக் காணும்
வளங்கள் கூடும் உறவு சேரும்
இணைந்து நாம் மகிழ்ந்தாலே - 2
1. மண்ணும் வளமும் பொருளும் திறனும்
மனித வாழ்வின் கொடைகளே
தன்னலங்கள் வளர்ந்ததாலே
பிரிவும் பகையும் மலிந்ததே - 2
ஒன்றாகும் எண்ணங்கள் ஓங்கி இன்று
உண்மைகள் உயிர் பெற்று உயரட்டும் - 2
உதிக்கும் உறவில் பிறக்கும் புதுயுகம்
அனைத்தும் சமமென ஆகட்டும் - 2
2. கலையில் கல்லும் கனிதல் போலே
கருணை ஒன்றே போதுமே
கடின மனமும் கரைவதாலே
மனித மாண்பும் உயருமே - 2
பரந்த உள்ளங்கள் அதிகமாக
அமைதி ஆற்றலும் செழிக்கட்டும் - 2 - உதிக்கும்