முகப்பு


947. உன் நாமம் சொல்ல சொல்ல என் நெஞ்சம் மகிழுதையா
உன் நாமம் சொல்ல சொல்ல என் நெஞ்சம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல உன் இன்பம் பெருகுதையா - 2

1. மாணிக்கத் தேரோடு காணிக்கை வந்தாலும்
உனக்கது ஈடாகுமா
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உனக்கது ஈடாகுமா - 2

2. தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்
உன் நாமம் என்னென்பேன்
நிறை என்பேன் இறையென்பேன் நீங்காத நினைவென்பேன்
உன் நாமம் என்னென்பேன் - 2

3. ஊரெல்லாம் உலகெல்லாம் உயிர் கொண்ட பேரெல்லாம்
உன் நாமம் சொல்லாதோ
பாரெல்லாம் வாழ்கின்ற படைப்புகளெல்லாமே
உன் நாமம் புகழாதோ - 2