முகப்பு


950. எந்தன் உள்ளம் வந்த தேவனே
எந்தன் உள்ளம் வந்த தேவனே
நன்றியோடு என்றும் பாடுவேன் - 2 இறைவா - 5
உன்னையன்றி யாரைப் பாடுவேன்
நன்றி மலர் உனக்குச் சூடுவேன்

1. உன் பாதை நான் செல்லும் பயணங்களில்
தடைகோடி வரும்போது எனைத் தாங்கினாய் - 2
உனைப்போல் நான் வாழத் துடிக்கின்ற வேளை - 2
கரம் நீட்டி ஒளிகாட்டித் துணையாகிறாய்
அஞ்சாத நெஞ்சோடு உனில் வாழவே - உன்னையன்றி

2. எனைச் சூழ்ந்த இருளெல்லாம் ஒளியாக்கினாய்
அருள் தந்து என் வாழ்வின் வழியாகினாய் - 2
கரைந்தோடும் படகாகத் தவிக்கின்றபோது - 2
கலங்கரை விளக்காகச் சுடர்வீசினாய்
உயிராக உணவாக உறவாகவே - உன்னையன்றி