முகப்பு


959. ஒப்பில்லா உம் கண்மணியாய்க் காத்திடும் இறைவா நன்றி
ஒப்பில்லா உம் கண்மணியாய்க் காத்திடும் இறைவா நன்றி
தாயாய் இருந்து மார்போடணைத்துத் தாங்கிடும் தலைவா நன்றி
அன்பால் என்னை நினைத்தீரே அருளால் என்னை நனைத்தீரே
கருவில் அறிந்தீர் கரத்தில் பொறித்தீர் போற்றி இறைவா பேற்றி

1. கருவாய் இருந்து கருவாக உயிராய் என்னில் வந்தீரே
பத்துத் திங்கள் பக்குவமாய் உதரம் கொடுத்து வளர்த்தீரே
- அன்பால் என்னை நினைத்தீரே

2. அன்னை தந்தையாய் உமை ஏற்க
அனைத்தும் நீயாய் இணைந்தீரே
சேயாய் உன்னடி தொடர்ந்திடவே காக்கும் தெய்வமாய் நடந்தீரே
- அன்பால் என்னை நினைத்தீரே