முகப்பு


960 ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன் - அதை
ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன் - அதை
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்
புகழ்பாடி புகழ்பாடி நான் வாழுவேன் - 2

1. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில்
மலர்ப் பாக்கள் பல கோடி உருவாக்கினாய் - 2
என் வாழ்வும் ஒரு பாடல் இசைவேந்தனே - அதில்
எழும் இராகம் எல்லாமுன் புகழ்பாடுதே - 2
ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே

2. இளங்காலைப் பொழுதுந்தன் புகழ்பாடுதே - அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே - 2
அலை ஓயாக்கடல் உந்தன் கருணை மனம் - வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச்சரம் - 2 ஆதியும் நீயே